Fidelis Capital Markets

Saturday, July 31, 2010

பங்குச்சந்தை

சார் , நிறைய பணம் போட்டு , அதில் லாபம் பார்த்து , அதற்குமேல நஷ்டம் ஆகி ,அப்பப்பா போதுமடசாமி சார் , இதெல்லாம்  ஆகாது , பணகரங்க சூதாட்டம் சார் , இது பங்குச்சந்தை ஈடுபட்டவர் பெரும்பாலும் கூறும் இல்லை புலம்பும் மொழி . சரி இந்த பங்குச்சந்தை வணிகத்தில் எப்படி லாபம் பார்ப்பது , நீங்க பங்குசந்தைக்கு புதியவர் என்றால் நிச்சயமா இந்த ப்ளாக் உங்களுக்கு உதவும் என்று நம்புறேன் .ஏற்கனவே ஈடுபட்டவர் என்றால் பின்வரும் பாயிண்ட்டுகளை சரிபார்த்துகொளுங்கள்.


பங்குச்சந்தை பகுதி 1 







புதியதாய் ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் பொழுது அல்லது வேலையில் ஈடுபடும் பொழுது அதன் அழமான விசயங்களை தெரிந்து வைப்பது அவசியம் அல்லது மேலோட்டமாக தெரிந்து கூட ஒரு அழலோசகர் உடன் இருந்தால் நல்லது . நல்ல மனது , கடவுளின் பிராத்தனை, குருட்டு அதிர்ஷ்டம் , அசட்டு தைரியம் எல்லாம் உங்களின் வெற்றியை வெகு நாட்கள் தக்கவைதிருக்காது , கஷ்டமான தருணங்களை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் கூட  போகலாம் . ஆகவே பங்கு வணிகத்தில் ஈடுபடும் முன் அதன் அடிப்படை விசங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் . 


  • என்ன சார் நீங்க , எனக்கு என்னோட தொழிலே சரியாய் இருக்கு இதுல இதுக்கெல்லாம் எங்க சார் நேரம் ?

  • ரொம்ப நாளா கஷ்டப்பட்டு கொஞ்சம்கொஞ்சமாய் சேர்த்த பணம் . இத வைச்சு அடுத்த படி ஏறனும், எனக்கு இந்த பங்கு சந்தை பாசை எல்லாம் தெரியாது , ஆனா ஆர்வம் இருக்கு. 
எந்தமாதிரி எந்தவித உழைப்பும் போடாமல் , பங்கு வணிகத்தில் ஈடுபட்டு இழந்தவர்கள்தான் அதிகம் ,ஏதோ ஒரு தரகு அலுவலகத்தில் இருந்து வந்த மார்க்கெட்டிங் அலுவலரை நம்பி , அந்த தரகு அலுவலகத்தின் டெர்மினல் டீலரை நம்பி , பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட , உங்களின் பங்களிப்பும் இருந்தால் நலம் .

                        அவர் இந்த பங்கை வாங்க சொன்னார் இதை விற்க சொன்னார் , என்ன சார் நீங்க , பணம் உங்களுடையது , அப்படின உங்களுக்குத்தான் முழு அக்கறை வேணும் ,அப்படி இல்லையென்றால் அது எப்படி நல்லா நடக்கும் , ஒரு வேலை உங்களின் அதிர்ஷ்டம் , உங்களின் அலுவலர் நல்லவராகும் , திறமை உள்ளவராகும் கூட இருக்கலாம் , அனால் ஒரு பெரிய நஷ்டம் , உங்களை புரட்டிபோட்டு ,அந்த அலுவலரையும் ,அந்த தரகு நிறுவனத்தையும் குறைகூற வைக்கும் . எதுக்கு சார் எதெல்லாம் , நாமலும் அந்த ஆலோசகருடன் இணைந்து எச்சரிகையுடன் செயல்படுவோமே , டீம் வொர்க் நல்லதுதானே .


                        மனைவி அமைவது மட்டும்தான் இறைவன் கொடுத்த வரம் , மனைவி ,மக்கள் எல்லாம் உறவு , இது பிசினஸ் , இங்க நாம்தான் , அறிவுடன் செயல்பட்டு அமைக்கணும் , சரி இனி நம் பாதைக்கு செல்வோம் .



பங்குசந்தையில் ஈடுபடும் முன் கவனிக்க வேண்டியவை .


1 . முதல்ல உங்களின் பினன்சியால் பிளான் முக்கியம் .


          இதுல நீங்க யாரு , உங்களை நம்பி இருபவர்கள் , உங்களது வருமானம் , செலவு , சேமிப்பு , உங்களின் கனவு , அதற்கு உங்களின் பங்களிப்பு ,ஆகியவை அடங்கும் . அதுவும் முறைபடுதபடும் .

             வடிவேல் சார் சொல்லுறமாதிரி , எதையும் பிளான் பண்ணி செய்யணும் .உலகத்தில எல்லாமே இயற்கையாகவே ஒரு ஒழுங்குபடுதப்பட்டிருக்கு , முறைபடுதபடதவை நீண்டநாள் நிலைக்காது . ஆரம்பத்தில் நீங்களே உங்கள் பினன்சியால் பிளான் பண்ணலாம் , உங்க வீட்டு மாச பட்ஜெட் மாதிரி , அதையே நீண்ட காலத்துக்கு போட்டு பார்த்து செய்யலாம் , அல்லது ஒரு நல்லா பினன்சியால் planner  - ரை அணுகுவது நலம் .




           என்னை பொறுத்தவரையில் பினன்சியால் பிளான் மிக அவசியம் , உதரணமாக , goal -லுக்கும் , aim -முக்கும் நிறைய வேறுபாடு உண்டு , goal  என்பது வெற்றியை சென்றடைய , ஏறவேண்டிய படிக்கட்டு , aim என்பது விளையாட்டில் வெற்றி பெறுவது , ஒரு goal போட்டால் ஆர்பரித்தால் மட்டும் போதாது ,அதை தக்கவைத்தால் மட்டுமே வெற்றி உறுதி , Suppose   எதிராளி ஒரு goal   போட்டு உங்களை சமன் செய்யலாம் , காலம உங்களுக்கு எதிராக விளையாடி ,விதி சதி செய்து , எதிராளி மேலும் ஒரு goal  போட்டு உங்களை நிலைகுலைய செய்யலாம் . வெற்றியை தட்டி செல்லலாம்.




    ஆகவே வெறும் ஒரு goal  மட்டும் வெற்றியை தந்துவிடாது , எதுவரை விழிப்புடனும் , விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் திர்மநித்தால்தான் , நீங்கள் இரண்டாவது goal   போடமுடியவில்லை என்றாலும் , எதிரியை ஒரு goal  கூட போடமுடியாமல் சமாளித்து வெற்றி பெறமுடியும் . அதுபோல Financial plan  முறைப்படி செய்தால் மட்டுமே , உங்களின் இலக்கின் படி , எவ்வளவு சதவித பணம் பங்கு சந்தையில் முதலிடு செய்வது மேலும் மற்ற வகையிலான முதலிடு , உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து தீர்மானிக்க முடியும் .